சிறுவர் அமுதம் 14.01.1990 தைப்பொங்கல் அன்று எனது தந்தை சின்னத்தம்பி இராஜேஸ்வரனால் (சின்ன இராஜேஸ்வரன், Sinna Rajeswaran) புலம்பெயர் நாடுகளில் வாழும் சிறுவர்களுக்காக எழுதி வெளியிடப் பட்ட மாதாந்த சஞ்சிகை ஆகும். எனது தந்தை 19.04.1994 அன்று வாகன விபத்தில் இறந்து விட எனது அன்னை புனிதமலர் இராஜேஸ்வரன் இதனை மேலும் ஐந்து வருடங்களுக்கு நடத்தினார். இந்த வலைப்பக்கம் மூலமாக இச்சஞ்சிகைகளை நாங்கள் ஒன்லைனில் வெளியிடுகிறோம்.
2 ஜன., 2026
28 ஜூன், 2020
நினைவுகள் ~ பொன் .புத்திசிகாமணி
அவரது நினைவுகளோடு!
பொன்.புத்திசிகாமணி.
எனக்கும் அமரருக்குமான வரலாற்றுப் பதிவில் முகவுரை எப்போது நடந்தது என்று இன்றுவரை யோசிப்பதுண்டு.
அவரின் முடிவுரையை அறிந்து கவலையுற்ற எனக்கு,இடையில் ஏற்பட்ட அவரது வாழ்க்கையில் பாதிக்குமேல் என் பதிவிருக்கும்.என்பதை நினைத்துப் பார்த்து மகிழ்வதுண்டு.
5 ஜூன், 2020
நினைவுகள் ~ ஜெயா குடும்பம்
உருத்திரபுரத்தே பிறந்தவராம்
உயிரெனத் தமிழை நினைத்தவராம்
உன்னத உயிர் அன்று உறைந்ததுவே
உறுதியின் உறைவிடம் தகர்ந்ததுவே
நான்கு வருடங்கள் நட்போடு நீர் இருந்தீர்
நான் வளரப் பலவழியில் நீர் உழைத்தீர்
கவிஞனாக எனை அன்று களத்தில் நீர் இறக்கிவிட்டீர்
கண்மூடித்தூங்கும் நேரம் காலனுடன் சென்றுவிட்டீர்
மகளை ஓர் கண்ணாக கரம்பற்றி வளர்த்து வந்தீர்
மனையாளை மறுகண்ணாய் மனதினிலே ஏற்றுவந்தீர்
மறைந்தது மாதங்களல்ல கரைந்தது கால் நூற்றாண்டு
மறக்குமா எம்மனது மலர்ந்த உம் முகம் அதனை
மக்கள் மனையாளுடன் மனதுருகிப் பிரார்த்திக்கும்
உன்னத உயிர் அன்று உறைந்ததுவே
உறுதியின் உறைவிடம் தகர்ந்ததுவே
நான்கு வருடங்கள் நட்போடு நீர் இருந்தீர்
நான் வளரப் பலவழியில் நீர் உழைத்தீர்
கவிஞனாக எனை அன்று களத்தில் நீர் இறக்கிவிட்டீர்
கண்மூடித்தூங்கும் நேரம் காலனுடன் சென்றுவிட்டீர்
மகளை ஓர் கண்ணாக கரம்பற்றி வளர்த்து வந்தீர்
மனையாளை மறுகண்ணாய் மனதினிலே ஏற்றுவந்தீர்
மறைந்தது மாதங்களல்ல கரைந்தது கால் நூற்றாண்டு
மறக்குமா எம்மனது மலர்ந்த உம் முகம் அதனை
மக்கள் மனையாளுடன் மனதுருகிப் பிரார்த்திக்கும்
ஜெயா குடும்பம்
21 மே, 2020
நினைவுகள் ~ கலைவாணி ஏகாணந்தராஜா
ஆண்டுகள் 25 கடந்தாலும் எம் மனங்களை விட்டகலாத மா மனிதர் சின்ன ராஜேஸ்வரன். எங்கள் குழந்தைகளின் அமுதம் மாமா. 1990ம் ஆண்டு. அப்போது நான் Köln என்ற இடத்தில் சங்கீத வகுப்பு நடாத்திக்கொண்டிருந்தேன். அப்போது மலையாள சமூகத்தினர் மட்டுமே
என்னிடம் கற்றுவந்தனர். ஒரு நாள் 6 அல்லது 7 வயது பெண் குழந்தையுடன்
ராஜேஸ்வரன் அவர்கள் வகுப்புக்கு சமூகமளித்திருந்தார். அந்த சிறுமி மிக சரளமாக தமிழ் பேசுவதையும் பாடல்களை மிக விரைவாக பாடம்செய்து பாடுவதையும் கண்டு பிரமித்தேன்.
என்னிடம் கற்றுவந்தனர். ஒரு நாள் 6 அல்லது 7 வயது பெண் குழந்தையுடன்
ராஜேஸ்வரன் அவர்கள் வகுப்புக்கு சமூகமளித்திருந்தார். அந்த சிறுமி மிக சரளமாக தமிழ் பேசுவதையும் பாடல்களை மிக விரைவாக பாடம்செய்து பாடுவதையும் கண்டு பிரமித்தேன்.
20 மே, 2020
நினைவுகள் ~ சாந்தி தயாபரன்
என் அன்பான ராசமாமா எம்மை விட்டுப் பிரிந்தாலும் இன்றும் எம்முடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். என் 11 வயதிலிருந்து நான் அவர்களுடன் வாழும் வாய்ப்பு கிடைத்தது. என்னைப் பிறர் போற்றுமளவிற்கு மிகவும் நன்றாக படிக்க வைத்தார். பின் நாட்டு நிலைமை காரணமாக ஐரோப்பாவிற்கு புலம் பெயர் வேண்டிய சூழ்நிலையில் என்னையும் தன்னுடன் அழைத்து வந்தார். அங்கே எனக்கு திருமணம் பேசி அவரே முன்னின்று செய்து வைத்தார்.
18 மே, 2020
நினைவுகள் ~ கௌரியன் சிவானந்தராஜா
நினைவுகள் ~ சிவானந்தராஜா & ரஞ்சிதாதேவி
எம்மை விட்டுப் பிரிந்து இறையடி சேர்ந்த திரு இராஜேஸ்வரன் அண்ணாவுடன் குடும்பம் சகிதமாக பழகிய நினைவுகள் பசுமையானவை.மிகுந்த அறிவாற்றல் நிரம்பப் பெற்றவர். இரங்கிய மனமும் எல்லோருக்கும் உதவி செய்யும் மனப்பான்மையும் உடையவர். தாய்மொழிப் பற்று, மொழி அறிவு நிரம்பிய இவர் அகதிகளாக தஞ்சம் புகுந்த தமிழ் மக்களிற்கு அகதி அந்தஸ்து கோரும் பல வழிமுறைகளைக் காட்டி செயல்படுத்தி எம்மைப் போல் பலருக்கும் உதவி புரிந்த மகத்தான ஓர் உறவு.
நினைவுகள் ~ சந்திரமலர் மகேந்திரன்
எனது கணவரின் மைத்துனரான திரு.இராஜேஸ்வரன் அவர்கள், எமது திருமணத்தின் பின் எனது சகோதரராக அறிமுகமானார். அறிமுகமான போது அவர் தோற்றத்தில் சிறிது கடுமையானவர் போற்தோற்றமளித்தாலும், பழகுவதற்கும், பிறருக்கு உதவிகள் செய்வதிலும் விரும்பத்தக்க ஒருவராக இருந்தார்.அவர் கடைசிவரை எம்குடும்பத்தோடு நல்லுறவோடு பழகி, கணவருக்கு நல்ல நண்பராகவும், நம்பிள்ளைகளிற்கு நல்லதொரு மாமாவாகவும் இருந்து வந்தார்.
குறிப்பாக ஏனையவர்கள் கூறியது போல் 1990 களில் நாம் பிள்ளைகளோடு இங்கு வாழ்ந்த காலத்தில் கணணி , இணையம், கைத்தொலைபேசி, போன்ற தொழில்நுட்பவசதிகளும், வானொலி ,தமிழ்த்தொலைக்காட்சி போன்ற தமிழ் ஊடகங்களும் இல்லாத காலம்.
நினைவுகள் ~ "மண்" சிவராசா
“சிறுவர் அமுதம்” சஞ்சிகை ஆசிரியர் சின்ன இராஜேஸ்வரன்
மறைந்து 25 வருடங்கள் ஓடிவிட்டாலும்….
![]() |
| "கடல்" ராஜன், சின்ன இராஜேஸ்வரனுடன், "மண்" சிவராசா |
அவர் ஒரு நகரிலும் நான் ஒரு நகரிலும் வாழ்ந்துகொண்டிருந்தோம். யேர்மனியில் தமிழர்களின் குடியேற்றப்பரம்பல் மெதுவாக அதிகரிக்கத் தொடங்கியது.
16 மே, 2020
நினைவுகள் ~ குலேந்திரன்
சின்னத்தான்...
எத்தனை இரவுகளில்
தூக்கம் கலைத்தவன் நீ
நடுநிசிகளில் கனாக்கண்டு
நீ இன்னும் உயிருடன் என்று
விழிகசிய விழித்தவன் நான்
சின்னத்தான் என்ற உறவு மரித்து
நண்பர்களாய் உலாவந்த நாட்களும் உண்டு
இது ஒன்றும் கவிக்காக தொகுக்கப்பட்டதல்ல
நிஜம்...
நிஜத்தின் வெளிப்பாடு...
நீ காலம் முந்தி சென்று விட்டாய்?
இதுதான் மற்றைய நிஜம்...
அன்புடன் பிங்கலையின் குஞ்சுமாமா
எத்தனை இரவுகளில்
தூக்கம் கலைத்தவன் நீ
நடுநிசிகளில் கனாக்கண்டு
நீ இன்னும் உயிருடன் என்று
விழிகசிய விழித்தவன் நான்
சின்னத்தான் என்ற உறவு மரித்து
நண்பர்களாய் உலாவந்த நாட்களும் உண்டு
இது ஒன்றும் கவிக்காக தொகுக்கப்பட்டதல்ல
நிஜம்...
நிஜத்தின் வெளிப்பாடு...
நீ காலம் முந்தி சென்று விட்டாய்?
இதுதான் மற்றைய நிஜம்...
அன்புடன் பிங்கலையின் குஞ்சுமாமா
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)










